×

வேகம் எடுக்கும் நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கு; சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வாய்ப்பு..!!

நெல்லை: நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கு வேகமெடுக்கிறது. வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், நேற்று முன் தினம் அவரது வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். நேற்று உடற்கூறு ஆய்வுக்கு பின் அவரது உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. இறப்பதற்கு முன்பு மரண வாக்குமூலம் என்ற பெயரில் 2 கடிதங்களை ஜெயக்குமார் எழுதியிருந்தார். ஜெயக்குமார் எழுதியிருந்த கடிதத்தில், காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட பலரது பெயர்களை குறிப்பிட்டிருந்தார்.

தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், இரவு நேரத்தில் மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதாகவும் நெல்லை மாவட்ட எஸ்.பி. சிலம்பரசனுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஜெயக்குமார் மரண வழக்கு தற்போது வேகமெடுத்துள்ளது. ஜெயக்குமார் எழுதிய கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்த திட்டமிட்டிருப்பதாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.

நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன், மூத்த காங்கிரஸ் தலைவர் தங்கபாலு உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த காவல்துறை திட்டமிட்டிருக்கிறது. ஜெயக்குமார் மரண வழக்கு தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது. ஆலோசனை கூட்டத்தில், வழக்கு தொடர்பாக கிடைத்த முதற்கட்ட விவரங்களை கொண்டு, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வாய்ப்பு உள்ளது.

The post வேகம் எடுக்கும் நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கு; சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வாய்ப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Nellai Kang ,Administrator ,Jayakumar ,CBCIT ,Nellie ,Nellie Congress ,executive ,CBCID ,Nellai East District Congress ,President ,Nellai Congress ,Dinakaran ,
× RELATED நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமாரின்...